பதிவு செய்த நாள்
05 ஏப்2019
00:02
புதுடில்லி:‘‘மத்தியில் மீண்டும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சீர்திருத்தங்களும், வரி குறைப்பு நடவடிக்கைகளும் தொடரும்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின், ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, ஏராளமான நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. அரசின் வருவாயை பெருக்கி, செலவைச் சுருக்கி, நிதிப் பற்றாக்குறை இலக்கை குறைத்து உள்ளது.
பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன.பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், இத்தகைய நிதி சீர்திருத்தங்களும், வரி குறைப்பு நடவடிக்கையும் தொடரும்.ஜி.எஸ்.டி.,வரி கொள்கைகள் குறித்த நிலைப்பாட்டில், இந்த இரு அம்சங்களை செயல்படுத்துவதில், நான் மிகத் தெளிவாக இருக்கிறேன்.சர்வதேச அளவில் பெரிய வளர்ச்சி அல்லது ஆதரவு இல்லாத சூழலிலும், நம் நாட்டின் பொருளாதாரம், 7 – 7.5 சதவீத வளர்சசி கண்டுள்ளது.
வளர்ச்சியை குறைய விடாமலும், அதேசமயம்,ஸ்திரமாக நீடிக்குமாறும் பார்த்துக் கொண்டோம். அடுத்து, மேலும் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கடந்த, 20 மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், சிமென்ட் தவிர்த்து, பெருவாரியான பொருட்கள், 28 சதவீத வரி வரம்பில் இருந்து, 18 மற்றும் 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன.
அடுத்து, 28 சதவீத வரியை நீக்க, அதிக காலம் தேவைப்படாது. கடந்த, ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, வரி விகிதங்களை உயர்த்தவில்லை.ஒரு சில வரியினங்களில், வரி செலுத்து வோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வரி வருவாயும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|