பதிவு செய்த நாள்
09 ஏப்2019
23:53
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 2018 – 19ம் நிதியாண்டில் நஷ்டம், 12 ஆயிரம் கோடியை தொடும்; ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 2016 – 17ல், 4,786 கோடி; 2017 –- 18ல், 7,992 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., வருவாய், ஆண்டுக்கு ஆண்டு, குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டம், 8,000 கோடி ரூபாயாக இருந்தது.இது, 2018 – 19ல், 12 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பி.எஸ். என்.எல்., லுக்கு மட்டுமல்லாமல், இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை, பி.எஸ்.என்.எல்., வருவாய், 2017 – 18ம் ஆண்டை விட, 25 முதல், 30 சதவீதம் குறைய வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|