பதிவு செய்த நாள்
12 ஏப்2019
23:47
புதுடில்லி:எரிபொருள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், கடந்த மார்ச்சில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 2.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரியில், 2.57 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச்சில், சில்லரை விலை பணவீக்கம், 4.28 சதவீதமாக அதிகரித்திருந்தது. உணவுப் பொருட்கள் பணவீக்கம், மைனஸ், 0.66 சதவீதத்தில் இருந்து, 0.3 சதவீதமாக உயர்ந்துள்ளது; எரிபொருள் மற்றும் மின்சார பிரிவின் பணவீக்கம், 1.24 சதவீதத்தில் இருந்து, 2.42 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை உற்பத்திஇந்தாண்டு பிப்ரவரியில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.தயாரிப்பு துறையின் உற்பத்தி குறைந்ததால், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்தது. கடந்த நிதியாண்டின், ஏப்ரல் –- பிப்ரவரி வரையிலான, 11 மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 4.3 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|