பதிவு செய்த நாள்
14 ஏப்2019
00:23
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், நடப்பாண்டின் ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில்,27 கோடி ரூபாய் வரை, கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது
.நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.நடப்பாண்டில், ஜன., முதல், மார்ச் வரையிலான காலாண்டில், மொத்த வருமானம் கடந்த ஆண்டை விட, 26.84 கோடி ரூபாய் உயர்வு கண்டது. சராசரி விலை கிலோவுக்கு, 100 ரூபாய் இருந்தது;
கடந்த ஆண்டு, 92.79 ரூபாய் என இருந்தது.சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:தேயிலை துாள் விற்பனையிலும், விலையிலும் ஏற்றம் கண்டு, 24.31 சதவீத வளர்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ தேயிலைக்கு, 7.40 ரூபாய் கூடுதலாக விலை கிடைத்ததுடன், 18 லட்சம் கிலோ தேயிலை துாளை, வர்த்தகர்கள் கூடுதலாக வாங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு, டிச., 10ம் தேதி முதல், வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி கூடாது என தேயிலை வாரியம் உத்தரவு பிறப்பித்ததால், குளிர்கால தேயிலை சந்தைக்கு வரவில்லை. இதனால், தென் மாநிலங்களின் தேயிலையை வர்த்தகர்கள் கொள்முதல் செய்தனர். இதே நிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதியில், கடந்த ஆண்டை விட, 108 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தில் ஏற்றம் காணும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|