பதிவு செய்த நாள்
22 ஏப்2019
10:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309.56 புள்ளிகள் சரிந்து 38,830.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 101.80 புள்ளிகள் சரிந்து 11,651ஆகவும் வர்த்தகமாகின.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு சரிவு, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கமான சூழல் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.69.82ஆக வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் எதிரொலியாக இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்தது, இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|