பதிவு செய்த நாள்
26 ஏப்2019
05:05
லாபம் இல்லாத, ‘இ – சேவை’ மையங்கள், ‘இல்லம் தோறும் இணையம்’ போன்ற திட்டங்களை கைவிடும் எண்ணத்தில், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் உள்ளது.
இது குறித்து அரசு கேபிள், ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது: அரசு, இ – சேவை மையங்களில், தாலுகா அளவில் செயல்படும் மையங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன. இதர மையங்கள் அனைத்தும், அதற்கான செலவை சரி கட்டும் அளவிற்கு கூட வருவாய் ஈட்டுவதில்லை. இதனால், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் செயல்படும் சேவை மையங்களை, அந்தந்த நகராட்சிகளிடமே ஒப்படைக்க, ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இதே போன்று, இல்லம் தோறும் இணையம் திட்டத்திற்கும், மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. தற்போது மொபைல் போனில் அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்று விடுகின்றனர். இத்துடன், மாநகராட்சி பேருந்து நிலையங்களில், இலவச, வை – பை சேவை வழங்கும் திட்டமும் வெற்றியடையவில்லை. இதனால், அரசு கேபிள், ‘டிவி’யை மட்டும், சிறப்பான முறையில் நடத்த ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|