சீனாவை கைகழுவும் அமெரிக்க நிறுவனங்கள்: இந்தியாவில் தயாரிப்பு பிரிவுகளை துவக்க ஆர்வம் சீனாவை கைகழுவும் அமெரிக்க நிறுவனங்கள்: இந்தியாவில் தயாரிப்பு பிரிவுகளை ... ...  விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வைப்பு நிதி மீது கடன் பெறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
06:45

எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், வைப்பு நிதி தான், பெரும்பாலானோர் அதிகம் நாடும் முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது. ஏழு நாட்கள் முதல், 10 ஆண்டுகள் வரை, பலவித கால அளவில், முதலீடு செய்யலாம். மேலும் வைப்பு நிதி வாயிலாக கடன் பெறும் வசதியும் இருப்பது தெரியுமா? இதன் அம்சங்களை பார்க்கலாம்:

என்ன? ஏன்?
வைப்பு நிதி மீதான கடன் வசதி என்பது, வங்கியில் ஒருவர் வைத்திருக்கும் வைப்பு நிதி மீது வழங்கப்படுவதாகும். முதலீட்டாளரின் டிபாசிட் தொகைக்கு எதிராக, ‘ஓவர் டிராப்டாக’ இது வழங்கப்படுகிறது. அவசர தேவை எனில், வைப்பு நிதியை பாதியில் விலக்கி கொள்வதற்கு பதில், இந்த வசதியை நாடலாம்.

தொகை எவ்வளவு?
பொதுவாக வைப்பு நிதியில், 70 முதல், 90 சதவீதம் வரை கடனாக பெறலாம். இது, வங்கிக்கு வங்கி மாறுபடலாம். இதற்கு என நிர்ணயிக்கப்பட்ட அனுமதி அளவு இல்லை. சில வங்கிகள் கூடுதலாக கூட வழங்கலாம். வங்கி மற்றும் டிபாசிட் தொகைக்கு ஏற்ப அமையும்.

வட்டி விகிதம்:
வைப்பு நிதி கடனுக்கான வட்டி விகிதம், அதற்கு முதலீட்டாளருக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை விட, 2 அல்லது, 2.5 சதவீதம் கூடுதலாக இருக்கும். எனினும், வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஆனால், தனிநபர் கடன் உள்ளிட்ட மற்ற கடன்களை விட இது குறைவு.

கால அளவு:
மற்ற கடன்களில், விரும்பிய கால அளவை தேர்வு செய்யலாம். ஆனால், வைப்பு நிதி கடனில், வைப்பு நிதிக்கான கால அளவே கடனுக்கான அதிக பட்ச கால அளவாகும். மற்ற கடன்கள் போலவே, மாதத்தவணையாக கடன் தொகையை செலுத்தலாம்.

செலவு இல்லை:
வைப்பு நிதி கடனுக்கு, பொதுவாக செயல்முறை கட்டணம் போன்றவை இல்லை. எனினும், சில வங்கிகள், குறைவான தொகையை வசூலிக்கலாம். கடனை, முன்கூட்டியே அடைப்பதற்கான, அபராத தொகையும் கிடையாது. கடன் காலத்தில், வைப்பு நிதிக்கான வட்டி வழக்கம் போல தொடரும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)