பதிவு செய்த நாள்
29 ஏப்2019
06:45
எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், வைப்பு நிதி தான், பெரும்பாலானோர் அதிகம் நாடும் முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது. ஏழு நாட்கள் முதல், 10 ஆண்டுகள் வரை, பலவித கால அளவில், முதலீடு செய்யலாம். மேலும் வைப்பு நிதி வாயிலாக கடன் பெறும் வசதியும் இருப்பது தெரியுமா? இதன் அம்சங்களை பார்க்கலாம்:
என்ன? ஏன்?
வைப்பு நிதி மீதான கடன் வசதி என்பது, வங்கியில் ஒருவர் வைத்திருக்கும் வைப்பு நிதி மீது வழங்கப்படுவதாகும். முதலீட்டாளரின் டிபாசிட் தொகைக்கு எதிராக, ‘ஓவர் டிராப்டாக’ இது வழங்கப்படுகிறது. அவசர தேவை எனில், வைப்பு நிதியை பாதியில் விலக்கி கொள்வதற்கு பதில், இந்த வசதியை நாடலாம்.
தொகை எவ்வளவு?
பொதுவாக வைப்பு நிதியில், 70 முதல், 90 சதவீதம் வரை கடனாக பெறலாம். இது, வங்கிக்கு வங்கி மாறுபடலாம். இதற்கு என நிர்ணயிக்கப்பட்ட அனுமதி அளவு இல்லை. சில வங்கிகள் கூடுதலாக கூட வழங்கலாம். வங்கி மற்றும் டிபாசிட் தொகைக்கு ஏற்ப அமையும்.
வட்டி விகிதம்:
வைப்பு நிதி கடனுக்கான வட்டி விகிதம், அதற்கு முதலீட்டாளருக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை விட, 2 அல்லது, 2.5 சதவீதம் கூடுதலாக இருக்கும். எனினும், வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஆனால், தனிநபர் கடன் உள்ளிட்ட மற்ற கடன்களை விட இது குறைவு.
கால அளவு:
மற்ற கடன்களில், விரும்பிய கால அளவை தேர்வு செய்யலாம். ஆனால், வைப்பு நிதி கடனில், வைப்பு நிதிக்கான கால அளவே கடனுக்கான அதிக பட்ச கால அளவாகும். மற்ற கடன்கள் போலவே, மாதத்தவணையாக கடன் தொகையை செலுத்தலாம்.
செலவு இல்லை:
வைப்பு நிதி கடனுக்கு, பொதுவாக செயல்முறை கட்டணம் போன்றவை இல்லை. எனினும், சில வங்கிகள், குறைவான தொகையை வசூலிக்கலாம். கடனை, முன்கூட்டியே அடைப்பதற்கான, அபராத தொகையும் கிடையாது. கடன் காலத்தில், வைப்பு நிதிக்கான வட்டி வழக்கம் போல தொடரும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|