பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
00:04
புதுடில்லி:இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., மத்திய- – மாநில பட்ஜெட்டை மதிப்பிடும் வகையில், புதிய குறியீடை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., ‘நிதி செயல்திறன் குறியீடு’ எனும் புதிய மதிப்பீட்டு குறியீடு மூலம், பட்ஜெட்டுகளின் தரத்தை மதிப்பிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து, சி.ஐ.ஐ., மேலும் கூறியுள்ளதாவது:ஒருங்கிணைந்த நிதி செயல்திறன் குறியீட்டை, நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது, மனித மேம்பாட்டு குறியீட்டின் முறைகளின் அடிப்படையில் நிறுவப்படும்.
ஆறு வகையான பிரிவுகளின் கீழ், பட்ஜெட்டுகள் அலசப்பட்டு, தரம் அறியப்படும்.குறிப்பாக, வருவாய் செலவினங்கள், மூலதன செலவுகள், வருவாயின் தரம், கடன் குறியீடு உள்ளிட்ட பல பிரிவுகளில், பட்ஜெட் அலசி ஆராயப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|