பதிவு செய்த நாள்
18 ஜூன்2019
06:30
புதுடில்லி: சகாய விலை வீடு திட்டங்களில், கட்டுமான நிறுவனங்களுக்கு, நிலம் வாங்க, வங்கிகள் நிதியுதவி வழங்க வேண்டும் என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ’கிரெடாய்’ நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து, ‘கிரெடாய்’ மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுமானங்களில், நிலத்தின் மதிப்பு மட்டுமே, திட்டத்தின் மதிப்பில், 40 சதவீதம் அளவுக்கு ஆகிவிடுகிறது. நிலம் வாங்கும்போதே, வாடிக்கையாளர்களிடமிருந்து, நிதி பெற முடியாததால், பெரும்பாலும், வங்கி சாரா நிறுவனங்கள் அல்லது தனியார் முதலீடுகள் மூலமாகத்தான் நிலம் வாங்க நிதி திரட்ட முடிகிறது.
ஆனால், இதற்கான வட்டி, 25 சதவீதம் வரை அதிகமாகி, செலவு கூடிவிடுகிறது. இந்த இடைவெளியை சரிசெய்ய, வங்கிகளின் உதவி, தேவைப்படுகிறது. மேலும், சகாய விலை வீடுகள் குறித்து, அனைத்து துறையினருக்கும், பொதுவான வரையறையை ஏற்படுத்த வேண்டும். மேலும், வீட்டுக் கடனுக்கான, வருமான வரிச் சலுகையிலும் மாற்றம் செய்ய வேண்டும். வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டுக்குமே, வருமான வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|