பதிவு செய்த நாள்
19 ஜூன்2019
07:17
புதுடில்லி: அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நிலையில், சீனாவிலிருந்தும் நெருக்கடிகள் முற்றுகின்றன.
சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்டு கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா, எக்ஸிம் பேங்க் ஆப் சீனா ஆகிய வங்கிகள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தங்களுக்கு குறைந்தபட்சம், 14 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளன. திவால் நடவடிக்கைக்கு தயாராகி உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நிறுவன சொத்துகளை விற்று கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. திங்கள் அன்று, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 57,382 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|