பதிவு செய்த நாள்
19 ஜூன்2019
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 19) அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகின. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 367.24 புள்ளிகள் உயர்ந்து 39,413.58ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 104.75 புள்ளிகள் உயர்ந்து 11,796.25ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்க பெடரல் வங்கி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதால் உலகம் முழுவதும் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கி, ஐடி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.69.49ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|