பதிவு செய்த நாள்
24 ஜூன்2019
07:07
நவீன வாழ்க்கையில், வாழ்வியல் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வியல் செலவுகள் என்பது, ஒருவரால் ஏற்றுக்கொள்ள கூடிய அளவில் இருக்க வேண்டும்; இல்லை எனில், சிக்கல் தான். வாழ்க்கை முறை, செலவு மிக்கதாக இருப்பதை அறிவதற்கான வழிகள் இதோ:
செல்வ வழி: முதலில் செல்வத்திற்கான அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். செலவந்தராக இருப்பது என்பது, அதிக பணத்தை சம்பாதிப்பது மட்டும் அல்ல. ஒருவர் அதிகம் சம்பாதித்து, அதிகம் செலவு செய்பவராக இருந்தால் அதனால் பலன் இல்லை. வாழ்க்கை முறை, வருமானத்திற்கே ஏற்ப இருந்தால் மட்டுமே வளம் செல்வம் சேர்க்க முடியும்.
கடன் தான் வழி: அதிக வருமானம் ஈட்டினாலும், ஒவ்வொரு மாத செலவுக்கும் சம்பள பணத்தை எதிர்பார்க்கும் நிலை இருந்தால் சிக்கல் தான். அப்போது, வாழ்வியல் செலவு அளவுக்கு அதிகம் இருப்பதாக பொருள். திடீரென ஒரு பெரும் தொகை தேவைப்படும் போது கையில் காசில்லாமல், கடன் தான் வழி என்ற நிலை இருப்பது ஆபத்தானது.
சேமிப்பு எங்கே? மாதாமாதம் சேமிப்புக்கான தொகை குறைகிறதா எனில், இதுவும் கவலைக்குரிய விஷயம். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யாமல் அதிகமாக செலவு செய்து கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது. குறைந்தது, 20 சதவீத வருமானத்தை சேமிக்க வேண்டும். இது சாத்தியமில்லை எனில், செலவுகளை கவனித்தாக வேண்டும்.
கடன் தவணை விகிதம்: வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணை தொகையை கணக்கு போட்டு பாருங்கள். இந்த தொகை வருமானத்தில், 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பாதுகாப்பான வரம்பை கடந்து விட்டதாக பொருள். கடன்களை கட்டுப்படுத்தி, இந்த விகிதத்தை சீராக்க முயற்சிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு கடன்: கிரெடிட் கார்டு பில் அதிகரித்து வருவதும், வருமானம் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்த்தும் அடையாளமாகும். இதன் உண்மையான அர்த்தம், வருமானத்திற்கு இருக்க வேண்டியதை விட செலவுகள் அதிகமாக இருக்கிறது என்பதாகும். இது, பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தவிர்க்க வேண்டியதாகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|