பதிவு செய்த நாள்
26 ஜூன்2019
06:50
சென்னை : வங்கிகளில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், சென்னை, ஐ.ஐ.டி., கமிட்டி, பல்வேறு பரிந்துரைகளை, ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான, தொழில்நுட்ப குழுவான, இந்திய மொபைல் பண பரிவர்த்தனை அமைப்பு, சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர், கவுரம் ரெய்னா தலைமையில் இயங்குகிறது. இந்த கமிட்டி, அவ்வப்போது, ரிசர்வ் வங்கி குழுவுக்கு பரிந்துரைகளை அனுப்பும்.
அதன்படி தற்போது வழங்கி உள்ள பரிந்துரை விபரம்: மாநில மொழிகளில், மொபைல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வசதி வேண்டும். ஐ.டி., சட்டத்தில், மாற்றம் வேண்டும். ‘டைப்’ செய்யும் வசதியை விட, ஒலி வழியான, டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை அதிகப்படுத்த வேண்டும். நிதி சார்ந்த, மற்ற நிறுவனங்களுக்கும், மொபைல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதி செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|