பதிவு செய்த நாள்
27 ஜூன்2019
07:00
புதுடில்லி: பொதுத் துறை வங்கிகள், தங்களிடம் கடன் வாங்கியவர்களின் சொத்துக்கள் மற்றும் கணக்குகள் குறித்து கேட்டால், அத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, வருமான வரித் துறையினருக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
இதன்படி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பற்றிய தகவலை, அவர் தாக்கல் செய்திருக்கும் வருமான வரி படிவத்திலிருந்து வழங்கப்படும்.
இது குறித்து, வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொது மக்களின் பணத்தில் செயல்படும், பொதுத் துறை வங்கிகளின் கடனை வசூலிப்பதற்கு உதவுவது என்பது, பொது நலனாகும். எனவே, பொதுநலன் அடிப்படையில், தகவல்களை வழங்கும் கொள்கை முடிவை வாரியம் எடுத்து உள்ளது.சொத்துக்கள் குறித்த தகவல்கள் மட்டுமின்றி, வங்கிகள் கோரினால், கடனாளியின் வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களையும் வழங்கலாம்.
இருப்பினும், வங்கியில் கடன் வாங்கியவர், அடமானம் வைத்திருப்பவர், உத்தரவாதம் அளித்திருப்பவர் ஆகியோர் குறித்த தகவல்களை மட்டுமே, வங்கிகளுக்கு வழங்க முடியும்.மேலும், கடனை மீட்பதற்கான நோக்கத்திற்காக மட்டுமே, இத்தகவலை வங்கிகள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|