‘நிடி ஆயோக்’ அமிதாப் காந்த் பதவி காலம் நீட்டிப்பு ‘நிடி ஆயோக்’ அமிதாப் காந்த் பதவி காலம் நீட்டிப்பு ...  பங்கு வெளியீட்டுக்கு வர ‘கோ ஏர்’ நிறுவனம் திட்டம் பங்கு வெளியீட்டுக்கு வர ‘கோ ஏர்’ நிறுவனம் திட்டம் ...
இரண்டே ஆண்டில் நல்ல காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
07:03

புதுடில்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில், நல்ல வளர்ச்சியை எட்ட முடியும் என, இந்திய நிறுவனங்கள் நம்பிக்கையாக இருப்பதாக, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவிலான, 14 சந்தைகளில், 2,500 நிறுவனங்களில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில், மிகவும் நம்பிக்கையான பார்வையை கொண்டிருப்பதில், இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சியை எட்ட முடியும் என, பத்தில், ஒன்பது இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன.மேலும், 77 சதவீத நிறுவனங்கள், ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது, அதிக நம்பிக்கையுடன் உள்ளன. 44 சதவீத ஏற்றுமதியாளர்கள், அதாவது, கிட்டத்தட்ட பாதி பேர், தங்களது ஏற்றுமதி, 5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, கருதுகின்றனர்.

இதேபோல் சீனாவுக்கு அடுத்தபடியாக, 59 சதவீத நிறுவனங்கள், தங்கள் முதலீட்டை, நிலையான முதலீட்டுக்கு மாற்றம் செய்ய விரும்புகின்றன.பிற எல்லா சந்தைகளிலும் காணாத ஒன்றை இந்திய சந்தையில் காணமுடிகிறது. இந்திய வணிகங்களில், 33 சதவீதம், சுற்றுச்சூழல் ரீதியாக மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தான் அது.செயற்கை நுண்ணறிவு, 5ஜி உள்ளிட்டவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் என, இந்திய நிறுவனங்கள் கருது கின்றன. இவை உலக சராசரியை விட அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம், ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 6.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற நிலையிலும், இந்திய நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.அதேபோல், 14 உலக சந்தைகளில், மிகப் பெரும் முதலீட்டு ஆர்வத்துடன் இருப்பதும், இந்திய நிறுவனங்கள் தான். ஆய்வில் பங்கேற்ற எந்த இந்திய நிறுவனமும், தங்களுடைய முதலீட்டை குறைத்து கொள்ளும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமல்ல, இந்தோனேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளைப் போலவே, இந்திய நிறுவனங்களும், தங்களுடைய தற்போதைய லாபத்திலிருந்து முதலீடு செய்ய விரும்புகின்றன.‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை அல்லது சேவைகளை விற்பதற்கான திறன் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்பு, வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் முதலீடு செய்ய, இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக, இந்திய நிறுவனங்கள் தான் திட்டமிட்டுள்ளன.

இந்திய பொருளாதாரத்தின் வலிமையும், மக்கள் தொகை ஆற்றலும், வளர்ச்சிக்கு பல வாய்ப்புகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)