பதிவு செய்த நாள்
05 ஜூலை2019
15:35
புதுடில்லி : மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்தும் பொறுப்புள்ள குடிமக்களுக்கு நன்றி தெரிவித்து வரிச்சலுகைகள் மற்றும் புதிய வரி அறிவிப்புக்களை வெளியிட்டார். தமிழில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி வரி அறிவிப்புக்களை வெளியிட்டார்.
வரிச்சலுகை விபரங்கள் :
* நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
* வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில் வரி விகிதங்கள் அறிவிக்கப்படும்.
* எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* ரூ.400 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி. தற்போது ரூ.250 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்டவர்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
* சோலார், கம்யூட்டர் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்கள் மறைமுக வரியின் கீழ் கொண்டு வரப்படும்.
* மின்சார வாகனங்கள் வாங்கினால் வருமான வரியில் விலக்கு பெறலாம்.
* மின்சார வாகன கடனுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு
* மின்சார வாகன உற்பத்தி தொழில் துவங்குவோருக்கு வரிச்சலுகை
* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இனி வருமான வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
* வீட்டு கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோரலாம்.
* வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம்.
* குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை
* சர்வதேச நிதிச்சேவை நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை
* ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|