பதிவு செய்த நாள்
01 ஆக2019
23:49
புதுடில்லி:ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ’செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, சுமார், 600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 300 கோடி ரூபாய் அளவுக்கு புதிய பங்குகளை வெளியிட இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுவதற்காக, இந் நிறுவனம், கடந்த ஆண்டு, செப்டம்பர், 5ம் தேதி, செபிக்கு விண்ணப்பம் செய்திருந்தது.விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, தற்போது, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கி உள்ளது, செபி.
திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த, ஏஞ்சல் புரோக்கிங் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ.,செக்யூரிட்டீஸ், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை நிர்வகிக்க இருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|