பங்குச் சந்தைபங்குச் சந்தை ...  பங்கு வெளியீட்டுக்கு வரும் கத்தோலிக் சிரியன் வங்கி பங்கு வெளியீட்டுக்கு வரும் கத்தோலிக் சிரியன் வங்கி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தேவை வேகமான நடவடிக்கைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:13

கடந்த சில வாரங்களில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார தேக்கம், உடனடியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கச் செய்துள்ளது.


வேகமான நடவடிக்கைகள் தான், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான துணிச்சலை மக்கள் மனதில் உருவாக்கும்.2009ல் ஏற்பட்ட தேக்கத்தில் இருந்து வெளிவர, அன்றைய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் பெரிதும் உதவின. அந்த முடிவுகள் விரைவாகவும், காலத்தோடும் எடுக்கப்பட்ட மிக அவசியமான பொருளாதார நடவடிக்கைகள்.இன்றைய சூழலும் கிட்டத்தட்ட, 2009ம் ஆண்டினை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.



அரசிடம் இப்போது என்ன எதிர்பார்க்கலாம்?



ஒருபுறம், பொருளாதார மந்த நிலை விலக அவசர நடவடிக்கைகள் கோர்வையாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.கிட்டத்தட்ட அவசர நிலையில் மருத்துவம் பார்ப்பது போன்ற உணர்வோடு அரசு செயல்பட வேண்டும். அடுத்தடுத்து முடிவுகள், கொள்கை மாற்றங்கள் மூலம், நம்பிக்கை வளர்க்கும் நகர்வுகளை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது.



இது, அரசின் மிக உயர்ந்த இடத்தில் இருந்து ஏற்பட்டால் மட்டுமே, தேவையான வேகத்தில் நடக்கும்.மறுபுறம், தொழில் மற்றும் முதலீட்டு உலகம், ஒருவித அச்ச மனப்பான்மையில் உறைந்து கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.இதற்கு அரசு பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும் போதாது. அரசுடன் தொழில் உலகம் இன்னும் அதிகம் உரையாடி தன் எண்ணங்களை அச்சமின்றி தெரிவிக்க வேண்டும்.இரு தரப்பும் வளர்ச்சி திரும்ப விரைந்து பாடுபட வேண்டும்.



இன்றைய சூழலில் வேகம் மிக அவசியம். தற்போது இந்த கருத்து பரிமாற்றங்கள் நடக்கத் துவங்கி உள்ளன. அடுத்த கட்டமாக, இணைந்த செயல்பாடுகள் ஏற்பட வேண்டும். தொய்வுற்ற தொழில்களை சரிசெய்து, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செலுத்த ஆவண செய்ய வேண்டும்.அதேசமயம், மேலும் பல தொழில்கள் தொய்வு அடையாமல் தடுக்கும் வண்ணம் கொள்கை முடிவுகள் அமைய வேண்டும்.



உள்நாட்டு முதலீட்டாளர்களின், எஸ்.ஐ.பி., முதலீடுகள் சந்தை ஓரளவு ஸ்திரமாக இருக்க உதவுகின்றன. இவை தொடரும் வண்ணம் அரசின் அறிவிப்புகளும், கொள்கை மாற்றங்களும் அமைய வேண்டும்.பன்னாட்டு முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய பங்குகளை வாங்கும் மன நிலைக்கு திரும்ப வேண்டும்.இது நடக்க சில காலம் ஆகும். இதற்கு இடையில் தோன்றும் காலகட்டம் நாம் முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்க சிறந்த நேரம்.



இந்திய பங்குகளில், இந்தியர்கள் அதிக முதலீடு செய்து, இனிவரும் காலங்களில், அதிக பயன் அடைய, இந்த இடைக்காலம் மிகச்சிறந்த நேரம்.பொருளாதாரத் தேக்கங்களை எதிர்கொள்வது என்பது எளிதல்ல. இதில், அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)