‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ விற்பனை உயர்வு ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ விற்பனை உயர்வு ...  முன்னணி வாகன துறை நிறுவனங்கள் வீழ்ச்சி முன்னணி வாகன துறை நிறுவனங்கள் வீழ்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
23:36

புதுடில்லி:ட்டின் வாகன விற்பனையில், கடந்த, 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில், 18.71 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், பயணியர் வாகன விற்பனை, தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக, வீழ்ச்சி கண்டு வருகிறது.


ஜூலை மாதத்தில் மட்டும், 31 சதவீதம் அளவுக்கு, பயணியர் வாகன விற்பனை, சரிவை சந்தித்துள்ளது.இது குறித்து, 'சியாம்' எனும், 'இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:வாகன விற்பனை, ஜூலை மாதத்தில், 19 ஆண்டுகளில் இல்லாத வகையில், 18.71 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன், டிசம்பர் 2000த்தில், வாகன விற்பனை, 21.81 சதவீதம் சரிந்தது.இதேபோல், உள்நாட்டு பயணியர் வாகன விற்பனையும், 19 ஆண்டுகளில் இல்லாத வகையில், 30.98 சதவீதம் சரிந்துள்ளது.


வேலை இழப்பு



வாகன விற்பனை, இப்படி சரிவடைந்து வருவதை அடுத்து, கடந்த மூன்று மாதங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வேலை இழந்துள்ளனர்.கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 30.98 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம், 2.01 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2.91 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.உள்நாட்டு கார் விற்பனை, 35.95 சதவீதம் சரிந்துள்ளது.



கடந்த ஆண்டு ஜூலையில், 1.92 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த ஜூலையில், 1.23 லட்சம் கார்களே விற்பனை ஆகியுள்ளன.மோட்டார் சைக்கிள் விற்பனை, 18.88 சதவீதமும், மொத்த இருசக்கர வாகன விற்பனை, 16.82 சதவீதமும், கடந்த ஜூலை மாதத்தில் சரிவை சந்தித்துள்ளன. வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, 25.71 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது.



வாகனப் பதிவும், ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, 18.71 சதவீதம் சரிவடைந்துள்ளது. இவ்வாறு சியாம் அமைப்பு தெரிவித்து உள்ளது.இந்நிலையில், இந்த சரிவு குறித்து, இவ்வமைப் பின், டைரக்டர் ஜெனரல், விஷ்ணு மாத்துார் கூறியதாவது:இந்த தரவுகள், வாகனத் துறை எவ்வளவு சரிந்துள்ளது என்பதையும், அரசு எவ்வளவு விரைவாக உதவ வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.



அரசு உதவி




இத்துறையானது, விற்பனையை அதிகரிக்க, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறது. இப்போது, அரசின் மீட்பு நிதியை கோரும் நிலைக்கு இத்துறை வந்துவிட்டது என, கருதுகிறேன்.அரசின் மீட்பு நிதியின் மூலம், சரிவை தடுத்து, வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப முடியும் என, கருதுகிறேன்.



கடந்த மூன்று மாதங்களில், வாகன தயாரிப்பு நிறுவனங்களில், தற்காலிக பணியாளர்களாக இருந்த, 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். 300 வாகன முகவர்கள், தங்கள் நிறுவனங் களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இரண்டு லட்சம் வேலைகள் பாதிப்புக்குள்ளாகும்.இதற்கு முன், 2008 - -09 மற்றும் 2013-- - 14 ஆகிய ஆண்டுகளில், இத்தகைய வீழ்ச்சியை, இத்துறை சந்தித்தது. இருப்பினும், அப்போது, இத்துறையின் ஒரு சில பிரிவுகளாவது வளர்ச்சி கண்டது.



ஆனால், இந்த முறை, அனைத்து பிரிவுகளுமே விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன. விற்பனையை அதிகரிக்க, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும். குறைந்தபட்சம், தற்காலிக மாகவாவது இந்த குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இதன் மூலமாக, விற்பனையை அதிகரிக்க முயற்சித்து பார்க்கலாம்.இந்த துறை எவ்வளவு அதிகம் கீழே விழுகிறதோ, அவ்வளவு அதிகம் மீண்டும் மேலே வருவதற்கு கஷ்டமாகிவிடும்.



இத்துறை சரிந்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவும் சரியும். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)