பதிவு செய்த நாள்
20 ஆக2019
11:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.23 புள்ளிகள் உயர்ந்து 37,502.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 16.15 புள்ளிகள் உயர்ந்து 11,070.05ஆகவும் வர்த்தகமாகின.
பின்னர் சரிந்த பங்குச்சந்தைகள் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 106.58 புள்ளிகள் சரிந்து 37,295.91ஆகவும், நிப்டி 44.15 புள்ளிகள் சரிந்து 11,009.75ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 23 காசுகள் சரிந்து ரூ.71.66ஆக வர்த்தகமானது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.71.43ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|