பதிவு செய்த நாள்
22 ஆக2019
06:47
புதுடில்லி: ‘விற்பனை சரிவு காரணமாக, 10 ஆயிரம் பேர் வரை, வேலையிழப்புக்கு ஆளாகலாம்’ என, பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி பிஸ்கெட் நிறுவனங்களுள் ஒன்றான, பார்லே நிறுவனத்தின் விற்பனையில், கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 ஆயிரம் பேர் வரை வேலையிழப்புக்கு ஆளாகலாம் என, பார்லே நிறுவன பிரிவுகளின் தலைவர், மயாங் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: பொருளாதார வளர்ச்சி குறைவதால், கிராமப்புற பகுதிகளில் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுஉள்ளது.இதனால், உற்பத்தி பாதிக்கப்படும். இதையடுத்து, 10 ஆயிரம் பேர் வரை வேலையிழப்புக்கு ஆளாக நேரிடும். பொருளாதார வளர்ச்சி குறித்து, அரசு உடனடியாக தலையிடாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். பார்லே நிறுவனத்தில், ஒரு லட்சம் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|