பதிவு செய்த நாள்
16 செப்2019
11:11
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(செப்.,16) சரிவுடன் ஆரம்பமாகின. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால், அதன் உற்பத்தி, 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிப்பதால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது.
காலை 10.00மணியளில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 210.02 புள்ளிகள் சரிந்து 37,111.29ஆகவும், நிப்டி 64.15 புள்ளிகள் சரிந்து 11,011.75ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்தது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் சரிந்து ரூ.71.60ஆக வர்த்தகமானது. சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் டாலரின் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|