பதிவு செய்த நாள்
05 அக்2019
23:48
புதுடில்லி:மத்திய அரசு, நாளை வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, ஒரு கிராம், 3,788 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்துள்ளது.
மக்களின் பண்டிகை கால கொண்டாட்ட மனநிலையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், திங்களன்று அடுத்த தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட தீர்மானித்துள்ளது.இந்த தங்க சேமிப்பு பத்திரம், நாளை முதல், 11ம் தேதி வரை, ஒரு கிராமுக்கு, 3,788 ரூபாய் என்ற
விலையில் வெளியிடப்பட உள்ளது.
வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஒரு
கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து
உள்ளது. இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 3,738 ரூபாய்க்கு கிடைக்கும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்புபத்திர திட்டத்தை அறிவித்தது. இதில்,தங்கத்தை, ஆவண வடிவில்
சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். ஒருவர்,
ஏப்., – மார்ச் வரையிலான ஒரு நிதியாண்டில், குறைந்தபட்சம், 1 கிராம் முதல், அதிகபட்சம், 500 கிராம் வரை, தங்க சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|