காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும் காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும் ...  அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சி அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குகளை விற்க சரியான தருணம் எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
06:15

பங்கு முதலீட்டில் லாபமடைய, சரியான நேரத்தில் பங்குகளை வாங்குவது போல, பங்குகளை விற்று வெளியேறுவதற்கான சரியான நேரத்தையும் அறிந்திருக்க வேண்டும்.


பங்குச்சந்தையில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் பலரும், பங்குகளை எப்போது வாங்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். நிறுவன அடிப்படை அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்து, வாங்க வேண்டிய பங்குகளையும் அதற்கான நேரத்தையும் தீர்மானிக்கின்றனர்.ஆய்வு செய்து பங்குகளை வாங்குவது சரியான உத்தி தான் என்றாலும், பங்குகளில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஏறுமுகத்தில் இருக்கும் பங்கை தொடர்ந்து கைவசம் வைத்திருந்தால், அவை சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் இழப்பு உண்டாகும்.

சரிவுக்கு உள்ளாகும் பங்குகள், அந்த நிலையில் இருந்து மீண்டெழவில்லை எனில், இழப்பு அதிகமாகும். சரி, ஒரு பங்கை விற்பதற்கான சரியான நேரத்தை அறிவது எப்படி?நல்ல காலம்ஒரு நிறுவனம் பற்றி எல்லா அம்சங்களும் சாதகமாக அமைந்திருக்கும் போது, அதன் பங்குகள் பெருமளவில் வாங்கப்படும். பத்திரிகைகளிலும் நல்லவிதமான செய்திகள் வெளியாகும். இவை, குறிப்பிட்ட பங்குகளின் விலையை மேலும் உயர்த்தும். பங்கு விலைக்கு சாதகமான அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு விட்டன.

இதற்கும் மேல் உயர வாய்ப்பில்லாமல் போகலாம் அல்லது இறக்கம் காணலாம். நல்ல பங்குகளை விற்று வெளியேற இதுவே சரியான தருணமாகும்.இதே போலவே, குறிப்பிட்ட துறை பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அத்துறையின் முன்னணி பங்குகளும் கவனத்தை ஈர்க்கும். எனவே, பலரும் அந்த பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இதற்கு முன், வங்கிசாரா நிதி நிறுவன துறை, இத்தகைய கவனத்தை பெற்றது. அதற்கு முன், மருந்தகத்துறை அனைவரையும் ஈர்த்தது.


ஆனால், வங்கிசாரா நிதி நிறுவன துறை பல்வேறு காரணங்களால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. மருந்தக துறை, தேக்கம் அடைந்துள்ளது. எனவே, ஒரு துறை உச்சத்தில் இருக்கும் போது, அதன் பங்குகளை படிப்படியாக விற்பது ஏற்றதாக இருக்கும்.ஏறுமுகம் காணும் பங்குகள் இறங்கவும் செய்யலாம். எப்போது இறக்கம் நிகழும் என கணிக்க முடியாது. பலரும் கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில், தொடர்ந்து விலை அதிகரிக்கும் பங்குகளை வாங்குகின்றனர். இறக்கம் உண்டுஉயர்ந்து கொண்டே இருக்கும் பங்குகளின் செயல்பாடு இறக்கம் காணும் நிலையும் வரலாம். சிறந்த பங்குகளுக்கு கூட இந்த நிலை ஏற்படலாம்.

இந்த அம்சத்தையும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.நிறுவன செயல்பாடுகளை பொருத்தவரை வர்த்தக நிர்வாகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. நிறுவன நிர்வாகத்தில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், முதலீட்டாளர்கள் அதன் பங்குகளில் இருந்து வெளியேற விரும்புகின்றனர். நிர்வாகம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ளும் நிறுவன பங்குகளில் இருந்து வெளியேறுவதும் சரியாக இருக்கும். நிறுவனத்தின் கடன்கள் அதிகம், இருந்தாலும் அது சிக்கலுக்குள் உள்ளாகலாம். அதிக கடன் கொண்ட நிறுவன பங்குகளையும் விற்பது பொருத்தமாக இருக்கும்.


ஆனால், பங்குகளை விற்ற பிறகு, அதன் விலை உயரும் நிலையும் ஏற்படலாம். அதற்காக வருந்துவதில் பயன் இல்லை. ஒரு பங்கின் விலை முழு உச்சத்தை தொட்ட பிறகு விற்பது என்பது யாருக்கும் சாத்தியமில்லை.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)