பதிவு செய்த நாள்
23 அக்2019
07:07
புதுடில்லி: வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டக் மெக்மில்லன், பிரதமர் மோடிக்கு, நிலையான வணிக சூழல் வேண்டி, கடிதம் எழுதியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான, வால்மார்ட், உலகெங்கிலும், 12 ஆயிரம் ஸ்டோர்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், 35.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை கொண்டதாகும்.மெக்மில்லன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் வணிக சூழலின் உறுதி குறித்தும், கணிக்கக்கூடிய தன்மை குறித்தும் அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்த வால்மார்ட்டின் நிலையினையும் கடிதத்தில் எடுத்து சொல்லியிருக்கிறார்.
எளிதில் வணிகம் செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து, பிரதமருக்கு கடிதத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.அண்மையில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளில் செய்திருக்கும் மாற்றங்கள், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியிருக்கும், வால்மார்ட் நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளது. கூடவே, மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வணிக மாதிரியை மறு ஆய்வு செய்யுமாறும் அது வர்த்தக அமைச்சரவைக்கு கோரிக்கை வைத்துவருகிறது. இச்சூழலில், வால்மார்ட் கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|