பதிவு செய்த நாள்
04 டிச2019
00:07
சென்னை:பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து, 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. தற்போது, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வு திட்டம், நவ., 4ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டம், நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில், நாடு முழுவதும், 78 ஆயிரத்து, 569 பேர் விருப்ப ஓய்வில் செல்ல, விருப்பம் தெரிவித்துள்ளனர். 5,237 பேர், தங்களின் விருப்ப ஓய்வு விண்ணபத்தை திரும்ப பெற்றுள்ளனர். 626 பேர், பின்னர் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் 78 ஆயிரத்து, 569 பேர், விருப்ப ஓய்வில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும்
தமிழ்நாடு வட்டம் இரண்டும் சேர்த்து, 8,000த்திற்கும்அதிமானோர், விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|