பதிவு செய்த நாள்
04 டிச2019
23:49
சென்னை:தமிழகத்தில், இளைஞர்களின் திறன் அளவுகளை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன், ‘டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுஷன்ஸ்’
நிறுவனம் கைகோர்த்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில், இளைஞர்களின் திறன் அளவுகளை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சிலுடன், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுஷன்ஸ் இணைந்துள்ளது.
இதில், இளைஞர்கள் உடனடியாக வேலைக்கு செல்லும் வகையில், அவர்களின் திறன்
அளவுகளை உயர்த்துவதற்கான பணியை, டி.வி.எஸ்., மேற்கொள்கிறது.லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து, 1,600க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள், 10 ஆயிரம் பேருக்கு, திறன் அளவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், 6,500 திறன் பயிற்சி பெற்றோர், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுஷன்ஸ் வாயிலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|