பதிவு செய்த நாள்
06 டிச2019
00:02
மும்பை:ரிசர்வ் வங்கி, 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுவதற்கேற்ற புதிய, ‘பிரீபெய்டு’ கார்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்த பிரீபெய்டு கார்டை கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்திருப்பதாவது:பி.பி.ஐ., எனும், இந்த, ‘பிரீபெய்டு பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்’ கார்டு, மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க உதவும். இந்த கார்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து முன்கூட்டியே செலுத்திக் கொள்ள வேண்டும்.
பின், இந்த பி.பி.ஐ., மூலம், ‘பில்’களுக்கு பணம் செலுத்துவது, பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.வாடிக்கையாளரிடமிருந்து தேவைப்படும் குறைந்த பட்ச தகவல்களை மட்டும் பெற்று இந்த கார்டு வழங்கப்படும்.இது குறித்து தேவையான அறிவுறுத்தல்களை இம்மாதம், 31ம் தேதிக்குள் வழங்க இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|