பதிவு செய்த நாள்
09 டிச2019
00:18
பிறந்த நாள், மண விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. ரொக்கமாகவும், பொருட்களாகவும் பரிசளிப்பதைவிட,
முதலீடு சார்ந்த நிதி சாதனத்தைபரிசளிக்கலாம். அதாவது, வைப்பு நிதி, பங்கு சான்றிதழ், பிரிபைடு கார்டு போன்ற நிதி சாதனத்தை பரிசளித்து ஒருவரது நிதி எதிர்காலத்தை
வளமாக்கலாம். இதற்கான வழிகள்:
எதிர்கால வளம்?
பலவிதமான பரிசு பொருட்கள் இருக்கின்றன. ஆனால், மற்ற வகை பரிசுகளைவிட, நிதி
பரிசுகள் நல்ல பலனை அளிக்கும். ஏனெனில், பரிசு பெறுபவர்களுக்கு இவைஎதிர்காலத்தில் பலன் அளிப்பவையாக இருக்கும். உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக அளித்தால், ஐந்தாண்டுகளில் அது கூடுதல் பலன் அளிக்கும்.
எது ஏற்றது?
நெருக்கமானவர்களுக்கு, நிதி சாதனத்தைபரிசளிப்பது என்று தீர்மானித்த பிறகு,
பொருத்தமான பரிசை தேர்வு செய்ய வேண்டும். தங்கம், பிரிபைடு கார்டு, வைப்பு நிதி, பங்கு சான்றிதழ்கள், மியூச்சுவல் பண்ட்கள், காப்பீடு போன்றநிதி சாதனங்களை பரிசளிக்கலாம். இவற்றில் எது ஏற்றதாகஇருக்கும் என தேர்வு செய்ய வேண்டும்.
பங்குகள் எப்படி?
ஒரு சில முதலீடுகள் பரிசளிக்க மிகவும்எளிமையானவை. உதாரணமாக, பங்குகளில்
முதலீடு செய்து பங்கு சான்றிதழை பரிசாக அளித்துவிடலாம். வைப்பு நிதி எனில், பரிசு
பெறுபவருடன் இணைந்து கூட்டு கணக்கு துவக்கிஅளிக்கலாம். கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றையும்எளிதாக பரிசலிக்கலாம்.
மியூச்சுவல் பண்ட்கள்:
முதலீடு நோக்கில் மியூச்சுவல் பண்ட்கள் சிறந்ததாக கருதப்பட்டாலும், பரிசளிக்க இவை
சிக்கலானவை. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து நேரடியாக பரிசளிக்க முடியாது. தம்பதி என்றால் கூட, இருவரும் இணைந்துகணக்கு துவக்க வேண்டும். ஆனால்,
மைனர்களுக்கு மியூச்சுவல் பண்ட்களை பரிசளிப்பது எளிது.
காப்பீடு எப்படி?
காப்பீடு திட்டங்களையும் பரிசாக அளிக்கலாம். ஆனால், இதற்கு நெறிமுறைகள் உள்ளன. ஆயுள் காப்பீடுஎனில், காப்பீடு நலன் கொண்ட நெருக்கமானவர்கள் மட்டுமே பரிசளிக்க
முடியும். நண்பர்கள், தூரத்து உறவினர்கள்பரிசளிக்க முடியாது. பெரியவர்கள் மட்டுமே
சிறியவர்களுக்கு பரிசளிக்க முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|