பதிவு செய்த நாள்
13 டிச2019
23:42
மும்பை:‘பிரின்ஸ் பைப்ஸ் அண்டு பிட்டிங்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்குகள் வெளியீடு, இம்மாதம், 18ம் தேதி துவங்கி, 20ம் தேதி அன்று நிறைவடைய உள்ளது.இந்நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில், 250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், 250 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் கைவசம் உள்ள பங்குகளும் வெளியிடப்பட உள்ளன.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஜே.எம்.பைனான்ஷியல்’ நிறுவனமும், ‘எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்’ நிறுவனமும் நிர்வகிக்கின்றன.
இந்த பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் வெளியீட்டு விலை, 177 முதல், 178 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரின்ஸ் பைப்ஸ் அண்டு பிட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு, நாட்டில் மொத்தம் ஆறு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று தமிழகத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப் படும் நிதியை, நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலிமர் பைப்புகள் மற்றும் பிட்டிங்குகள் தயாரிப்பில், முன்னணியில் உள்ளது இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|