அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் ...  நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடு 60 சதவீதம் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
03:20

மும்பை: பொருளாதார சூழல் காரணமாக, நடப்பு ஆண்டில், நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியீடு மூலம் நிதி திரட்டுவது, 60 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

2018ல், 30 ஆயிரத்து, 959 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து, 362 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், சி.எஸ்.பி., வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் அமோக வெற்றி பெற்ற போதிலும் கூட, மொத்தத்தில் வீழ்ச்சியை கண்டுள்ளது, நடப்பு ஆண்டு.

இந்த ஆண்டில் இதுவரை, 16 நிறுவனங்கள் மட்டுமே, புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. 2018ல், 24 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்திருந்தன. அறிகுறிகள்நடப்பு ஆண்டில், 47 நிறுவனங்கள், மொத்தம், 51 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட, செபி அனுமதி வழங்கியும், அவை பங்கு வெளியீட்டுக்கு வராமல் தவிர்த்துவிட்டன. இதற்கு, இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதமாக, ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிந்ததும், வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தொடர்ந்து காணப்படாததும் காரணமாக அமைந்தன.இருப்பினும், நிறுவனர்களின் பழைய பங்குகள் விற்பனை, தகுதி வாய்ந்த நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளிட்டவை மூலம், நிறுவனங்களால் மொத்தம் திரட்டப்பட்ட நிதி, 81 ஆயிரத்து, 174 கோடி ரூபாய்.

இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 63 ஆயிரத்து, 651 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், 2017ல் திரட்டிய நிதி, 1.60 லட்சம் கோடி ரூபாய்.நடப்பு ஆண்டில், அதிகபட்சமாக, 2,850 கோடி ரூபாயை, ‘ஸ்டெர்லிங் அண்டு வில்ஸன் சோலார்’ நிறுவனம், புதிய பங்குகள் வெளியீடு மூலம் திரட்டியது. நிறுவனங்கள் திரட்டிய நிதியின் சராசரி அளவு, 773 கோடி ரூபாய்.ஏழு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில், 10 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்களை பெற்று வெற்றி பெற்றன.

அனுமதிபட்டியலிடப்பட்ட தினத்தில், 15 நிறுவனங்களில், ஏழு மட்டுமே, 10 சதவீதத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டின. இரண்டு நிறுவனங்கள், அறிமுக விலையை விட குறைவான விலையில் வர்த்தகம் ஆகின.தற்போதைய நிலையில், 21 நிறுவனங்கள், 18 ஆயிரத்து, 700 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட, செபியின் அனுமதியை பெற்று கையில் வைத்துள்ளன.மேலும், 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட, 13 நிறுவனங்கள் செபியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)