பதிவு செய்த நாள்
17 ஜன2020
05:20
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில், 1.8 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.
இதையடுத்து, நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது.இந்த சரிவுக்கு, பிளாஸ்டிக், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனம், தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்ததே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இறக்குமதிஏற்றுமதியை போலவே, இறக்குமதியும் குறைந்துள்ளது. நாட்டின் இறக்குமதி, டிசம்பர் மாதத்தில், 8.83 சதவீதம் குறைந்துள்ளது. இம்மாதத்தின் இறக்குமதி மதிப்பு, 2.74 லட்சம் கோடி ரூபாய். நாட்டின் இறக்குமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக சரிந்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இருப்பினும், இறக்குமதி குறைந்ததை அடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 79 ஆயிரத்து, 875 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதத்தில், தங்கத்தின் இறக்குமதி, 4 சதவீதம் அளவுக்கு குறைந்து, 17 ஆயிரத்து, 466 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், முக்கியமான, 30 துறைகளில், 18 துறைகளில் ஏற்றுமதி குறைந்துள்ளது. பிளாஸ்டிக், 18.4 சதவீதமும், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், 7.55 சதவீதமும், தோல் பொருட்கள், 5.26 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.
சேவைகள்கடந்த ஆண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி, 1.96 சதவீதமும், இறக்குமதி, 8.9 சதவீதமும் குறைந்துள்ளன. சேவைகள் ஏற்றுமதியை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில், 1.28 லட்சம் கோடி ரூபாய் ஆகவும், இறக்குமதி, 81 ஆயிரத்து 650 கோடி ரூபாயாகவும் இருந்ததாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|