பதிவு செய்த நாள்
22 ஜன2020
06:48
மும்பை : ரிசர்வ் வங்கி, அதன் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை, பொதுவெளியில் தெரிவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும் வகையில், இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது போன்ற தகவல்களை கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாத நிலையை உருவாக்குவதற்காகவும், இந்த முயற்சியை, ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கிறது. இந்த முயற்சியின் ஆரம்பமாக, கடந்த ஆண்டு அக்டோபரில், சண்டிகரில் நடைபெற்ற, வங்கி இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கி, பல ஆண்டுகளாக அதன் செயல்பாடுகள் தொடர்பாக, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, நிர்வாக குழு கூட்டங்களின் முடிவுகள் குறித்த தகவல்களை, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|