பதிவு செய்த நாள்
23 ஜன2020
01:46
புதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ஆண்டிலிருந்து, 6 மடங்கு அதிகரித்துள்ளது என, பிராண்டு பைனான்ஸ் அறிக்கை தெரிவித்து உள்ளது.
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:டி.சி.எஸ்., நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு, 2010ம் ஆண்டிலிருந்து, 6 மடங்கு அதிகரித்து, 2019ல், 95 ஆயிரத்து, 850 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், மிக வேகமாக வளர்ச்சி கண்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிராண்டாக, டி.சி.எஸ்., உள்ளது. உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் உள்ள, மூன்று பெரிய நிறுவனங்களில் ஒன்றாக, டி.சி.எஸ்., இடம் பெற்றுள்ளது.
மேலும், கடந்த ஆண்டிலும் மிக வேகமான வளர்சி பெற்ற, மூன்று நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.டாடா குழுமம், உலகின் டாப், 100 பிராண்டுகளில் ஒன்றாக இருப்பதற்கு, டி.சி.எஸ்., ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|