பதிவு செய்த நாள்
26 ஜன2020
02:53
புதுடில்லி : இந்திய, ‘ஸ்மார்ட் போன்’ சந்தை, கடந்த ஆண்டில், அமெரிக்க சந்தையை விஞ்சியுள்ளது.இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை, முதன் முறையாக, அமெரிக்க சந்தையை, கடந்த ஆண்டில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில், 15.8 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளன என, ‘கவுன்டர்பாயின்ட்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியா, முதன் முறையாக, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியதுடன், உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாகவும் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீன நிறுவனங்கள்இதற்கு மிக முக்கிய காரணம், சீன நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள். மத்திய தர போன்களை, கூடுதல் வசதிகளுடன் வழங்கின. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடமிருக்கும் முதல் அல்லது இரண்டாவது போனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நவீன போன்களை அவை அறிமுகம் செய்தன.மேலும், ‘ஆன்லைன்’ மூலமான விற்பனை அதிகரித்ததை அடுத்து, அதன் மூலம் விரைவாக, தங்களது புதிய அறிமுகங்களை சந்தையில் கொண்டு செல்வது, இந்நிறுவனங்களுக்கு எளிதாக அமைந்து விட்டது.
சீனாவின், ‘சயோமி’ நிறுவனம், கடந்த ஆண்டில், இந்தியாவில், 28 சதவீத சந்தையை கைப்பற்றி இருக்கிறது.‘சாம்சங்’ 21 சதவீதம், ‘விவோ’ 16 சதவீதம், ‘ரியல்மி’ 10 சதவீதம், ‘ஒப்போ’ 9 சதவீதம் என்ற அளவில், சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன.முன்னேற்றம்கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், விவோ போன், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.கடந்த ஆண்டில் சீன போன்கள், 72 சதவீத சந்தையை கைப்பற்றி உள்ளன.
இதற்கு முந்தைய ஆண்டில், இது, 60 சதவீதமாக இருந்தது.பியூச்சர் போன்களிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு மாறும் போக்கும், ஸ்மார்ட் போன் சந்தை அதிகரிக்க முக்கிய காரணமாகி உள்ளது.ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டில், பியூச்சர் போன்களின் விற்பனை, 42 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.பியூச்சர் போன்களை பொறுத்தவரை, டிசம்பர் காலாண்டில், ‘ஐடெல்’ நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை அடுத்து, ‘சாம்சங், லாவா’ நிறுவனங்கள் உள்ளன.இவ்வாறு கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|