ரூ.25 ஆயிரம் கோடி ‘பதஞ்சலி’ இலக்கு ரூ.25 ஆயிரம் கோடி ‘பதஞ்சலி’ இலக்கு ...  ‘ரிலையன்ஸ் டிஜிட்டல்’ குடியரசு தின சலுகை ‘ரிலையன்ஸ் டிஜிட்டல்’ குடியரசு தின சலுகை ...
‘ஸ்மார்ட் போன்’ சந்தையில் இந்தியா சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
02:53

புதுடில்லி : இந்திய, ‘ஸ்மார்ட் போன்’ சந்தை, கடந்த ஆண்டில், அமெரிக்க சந்தையை விஞ்சியுள்ளது.இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை, முதன் முறையாக, அமெரிக்க சந்தையை, கடந்த ஆண்டில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில், 15.8 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியுள்ளன என, ‘கவுன்டர்பாயின்ட்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியா, முதன் முறையாக, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியதுடன், உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாகவும் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீன நிறுவனங்கள்இதற்கு மிக முக்கிய காரணம், சீன நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள். மத்திய தர போன்களை, கூடுதல் வசதிகளுடன் வழங்கின. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடமிருக்கும் முதல் அல்லது இரண்டாவது போனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நவீன போன்களை அவை அறிமுகம் செய்தன.மேலும், ‘ஆன்லைன்’ மூலமான விற்பனை அதிகரித்ததை அடுத்து, அதன் மூலம் விரைவாக, தங்களது புதிய அறிமுகங்களை சந்தையில் கொண்டு செல்வது, இந்நிறுவனங்களுக்கு எளிதாக அமைந்து விட்டது.

சீனாவின், ‘சயோமி’ நிறுவனம், கடந்த ஆண்டில், இந்தியாவில், 28 சதவீத சந்தையை கைப்பற்றி இருக்கிறது.‘சாம்சங்’ 21 சதவீதம், ‘விவோ’ 16 சதவீதம், ‘ரியல்மி’ 10 சதவீதம், ‘ஒப்போ’ 9 சதவீதம் என்ற அளவில், சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன.முன்னேற்றம்கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், விவோ போன், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.கடந்த ஆண்டில் சீன போன்கள், 72 சதவீத சந்தையை கைப்பற்றி உள்ளன.

இதற்கு முந்தைய ஆண்டில், இது, 60 சதவீதமாக இருந்தது.பியூச்சர் போன்களிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு மாறும் போக்கும், ஸ்மார்ட் போன் சந்தை அதிகரிக்க முக்கிய காரணமாகி உள்ளது.ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டில், பியூச்சர் போன்களின் விற்பனை, 42 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.பியூச்சர் போன்களை பொறுத்தவரை, டிசம்பர் காலாண்டில், ‘ஐடெல்’ நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை அடுத்து, ‘சாம்சங், லாவா’ நிறுவனங்கள் உள்ளன.இவ்வாறு கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)