பதிவு செய்த நாள்
26 ஜன2020
02:54
அவினாசி : ‘‘ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன், வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், திருப்பூர் ஆடை ஏற்றுமதி, ஒரே ஆண்டில் இரு மடங்காகும்,’’ என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறினார்.
விழா ஒன்றில் பங்கேற்று, இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:திருப்பூர் பின்னலாடை தொழிலில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 24 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.பின்னலாடை தொழில் துறையினர் மத்தியில், தன்னம்பிக்கை குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, மீண்டு வருவது திருப்பூர் தொழில் துறையினருக்கு புதிதல்ல. தொழில் துறையினர், தன்னம்பிக்கை இழக்கக் கூடாது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மட்டுமே, ஆயத்த ஆடை வர்த்தகம் மேம்பட ஒரே தீர்வு. வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் வேகமாக வளர்வதற்கு, இந்த ஒப்பந்தமே காரணம்.ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளுடன், வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். அனுமதி கிடைத்தால், அடுத்த ஓராண்டில் ஏற்றுமதி வர்த்தகம் இரு மடங்கு அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|