பதிவு செய்த நாள்
26 ஜன2020
03:00
திருச்சி, ஜன. 26–‘‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்,’’ என, அவ்வங்கியின் முதன்மை செயல் இயக்குனர் தெரிவித்தார்.
திருச்சியில், இவ்வங்கி சார்பில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது.இதில் பங்கேற்று, வங்கியின் முதன்மை செயல் இயக்குனர் கர்ணம் சேகர் கூறியதாவது:இதுவரை, தொழில் கடன் திட்டத்தில், 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதற்காக, இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.பயனாளிகளை தேர்வு செய்து, கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கியின், 3,300 கிளைகளில், 200 கிளைகளை கடன் திட்டத்துக்காக தேர்வு செய்து, பயிற்சி பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவர். தொழில் வாய்ப்புகள் உள்ள, சென்னை, கோவை போன்ற இடங்களில் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முகாம்கள் நடத்தப்படும். 2021ம் ஆண்டில், தொழில் கடன் திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மையான வங்கியாக மாற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|