பதிவு செய்த நாள்
28 ஜன2020
06:09
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் நேற்று, கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ நேற்று, 458 புள்ளிகள் சரிவடைந்தது.
சீனாவில், ‘கொரோனா வைரஸ்’ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, இந்த சரிவு நிகழ்ந்தது.சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், அதன் காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால், உலகின் பல சந்தைகளில், அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. இதன் பாதிப்பு நேற்று, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தக இறுதியில், 458.07 புள்ளிகள் சரிவடைந்து, 41155.12 புள்ளிகளில் நிலைபெற்றது.இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ வர்த்தக முடிவில், 129.25 புள்ளிகள் சரிந்து, 12119 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பிரிவில், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் அதிக விலையிழப்பை சந்தித்தன. 4.31 சதவீதம் அளவுக்கு, இப்பங்குகளின் விலை சரிவை கண்டன.
இதற்கு அடுத்து, இண்டஸ்இண்ட் பேங்க், எஸ்.பி.ஐ., பவர் கிரிட், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் விலை சரிவை சந்தித்தன.இதற்கு மாறாக, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி, டெக் மகிந்திரா ஆகிய பங்குகள், 1.63 சதவீதம் வரை விலை உயர்வை கண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|