பதிவு செய்த நாள்
02 பிப்2020
23:49
இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், அந்த வங்கிகள் மூலம் பெற்ற குழு மருத்துவ காப்பீடு திட்டங்கள் தொடர்வது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ‘இர்டாய்’ தெளிவு படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம், பத்து பொது துறை வங்கிகள், நான்கு பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இணைப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.இதனிடையே, இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் நிலை தொடர்பாக குழப்பம் நிலவியது. இது தொடர்பாக கவலை வேண்டாம் என, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பெற்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் அவற்றின் முடிவு காலம் வரை, காப்பீடு நிறுவனங்களால் தொடர்ந்து சேவை அளிக்கப்படும் என இது தொடர்பான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலிசி காலம் முடிந்த பின், இணைப்பை மேற்கொண்ட பிரதான வங்கிகள், அதே நிறுவனத்துடன் தொடர்வது குறித்து தீர்மானிக்கும். வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கியின் முடிவுக்கு ஏற்ப பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|