கோல்டு இ.டி.எப்., திட்டங்கள் கோல்டு இ.டி.எப்., திட்டங்கள் ... தொழில் துறை உற்பத்தி குறியீடு டிசம்பரில் சரிவு  சில்­லரை விலை பண­வீக்­கம் அதி­க­ரிப்பு தொழில் துறை உற்பத்தி குறியீடு டிசம்பரில் சரிவு சில்­லரை விலை பண­வீக்­கம் ... ...
பொதுத்துறை நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்புகடந்த நிதியாண்டில் 24.41 லட்சம் கோடி ரூபாய் குவித்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
23:46

புதுடில்லி:கடந்த, 2018 – 2019ம் நிதியாண்டில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், என்.டி.பி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதித்துள்ளன.அதேசமயம், பி.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள் அதிகபட்ச இழப்பை சந்தித்துள்ளன.

அனைத்து மத்திய பொதுதுறை நிறுவனங்களின் செயல்திறனை அறியும் வகையில் எடுக்கப் பட்ட, ‘பொதுத்துறை நிறுவன கணக்கெடுப்பு 2018 – -19’ல் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்த கணக்கெடுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில் உள்ள, 70 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தும் நஷ்டத்தில், 94.04 சதவீதத்தை, அதிக இழப்பை ஏற்படுத்தும் டாப் – 10 நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.

அனைத்து லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த லாபத்தில், 15.3 சதவீதம் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தினுடையதாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், என்.டி.பி.சி., ஆகியவற்றின் பங்கு முறையே, 9.68 சதவீதம் மற்றும் 6.73 சதவீதம் ஆகும்.கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், லாபம் தந்துக் கொண்டிருந்த எம்.எஸ்.டி.சி., மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், 2018 – -19ம் நிதியாண்டில் அதிகளவு இழப்பை ஏற்படுத்தும், 10 நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டன.

அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம், 2018 – ௧9ல், 24.41 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 20.32 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மொத்த வருமானத்தின் வளர்ச்சி, 20.12 சதவீதமாக, கடந்த நிதியாண்டில் அதிகரித்து உள்ளது.

ஜி.எஸ்.டி., சுங்க வரி, கார்ப்பரேட் வரி, டிவிடெண்டு உள்ளிட்டவையால், மத்திய அரசுக்கு, இந்த பொதுதுறை நிறுவனங்கள் மூலமாக, 3.69 லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 3.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்த கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம், 348 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 249 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 86 நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


மீதம் உள்ள, 13 நிறுவனங்கள், மூடப்பட்டு உள்ளன அல்லது மூடும் முயற்சியில் உள்ளன. இவ்வாறு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)