பதிவு செய்த நாள்
18 பிப்2020
02:55
புதுடில்லி; எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை, வேறு எந்த நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என, எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை, ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் இணைக்க இருப்பதாக, நேற்று சந்தையில் செய்திகள் பரவியதை அடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை, வேறு எந்த நிறுவனத்துடனும் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
இது குறித்து, சந்தையில் உலவும் செய்திகள் எதுவும் உண்மையில்லை.இவ்வாறு, எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஐ.டி.பி.ஐ., வங்கியும், ’நிர்வாகக் குழு கூட்டத்தில், எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடனான இணைப்பு குறித்து எந்த திட்டமும் ஆலோசிக்கப்படவில்லை’ என தெரிவித்துள்ளது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில், எல்.ஐ.சி., நிறுவனம், 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம், 5,763 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நேற்றைய வர்த்தகத்தின் இடையே, இந்நிறுவனப் பங்கின் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|