பதிவு செய்த நாள்
19 பிப்2020
06:29
புதுடில்லி : பார்பிக்யு நேஷன் உணவகம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
பார்பிக்யு நேஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், 1,000 – 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கிறது. இதற்காக, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 275 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும், 98.23 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், ஆக்ஸில் கேப்பிட்டல், அம்பிட் கேப்பிட்டல், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.இந்நிறுவனத்துக்கு, இந்தியாவில், 138 உணவகங்களும், வெளிநாடுகளில், 7 உணவகங்களும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|