பதிவு செய்த நாள்
25 பிப்2020
05:51
புதுடில்லி: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட, ‘ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய வங்கிப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அண்மையில், தொலைதொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, ‘ஸ்பெக்ட்ரம்’ சம்பந்தமாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டது. இதனால், ‘வோடபோன் ஐடியா, ஏர்டெல்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, நிதிச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்த வரிசையில், இந்தியாவில், செயற்கைக்கோள் பிராட்பேண்டு சேவைகளை வழங்கும், அமெரிக்காவைச் சேர்ந்த, ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் நிறுவனமும், 600 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் பாதுகாப்பு, கல்வி, மற்றும் வங்கி ஆகிய துறைகளுக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், நிறுவனத்தால் பாக்கித் தொகையை செலுத்த இயலாது என்றும், திவால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தொலைதொடர்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்நிறுவனம், இந்தியாவில் அதன் சேவைகளை நிறுத்திக் கொள்ளுமானால், 70 ஆயிரம் வங்கி பகுதிகள், இந்திய கடற்படை, ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில், செயற்கைக்கோள் பிராட்பேண்டு சேவைகள் பாதிக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|