தங்கம் விலை சவரன் ரூ.552 சரிந்ததுதங்கம் விலை சவரன் ரூ.552 சரிந்தது ... டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் ...
ஜி.எஸ்.டி., பதிவு யாருக்கு எப்போது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
18:34

நாடு முழு­வ­தும் வர்த்­த­கம், வரி வசூ­லிப்பு முறையை எளி­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக, ஒரே நாடு – ஒரே வரி என்ற அடிப்­ப­டை­யில் ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­னது. நடை­மு­றை­யில் இருந்த வாட், கஸ்­டம்ஸ், சேவை போன்ற பல­வரி முறை­கள் நீக்­கப்­பட்டு 2017ல் ஜி.எஸ்.டி., அம­லா­னது. அப்­போது நாடு முழு­வ­தும் பழைய வரி முறை­யில் வர்த்­த­கம் செய்து கொண்­டி­ருந்த 38.5 லட்­சம் வர்த்­த­கர்­கள், ஜி.எஸ்.டி.,க்கு மாறி­னார்­கள். ஜி.எஸ்.டி.,யின் பயனை பார்த்து கூடவே புதிய வர்த்­த­கர்­களும் லட்­சக்­க­ணக்­கில் பதிவு செய்­தார்­கள்.

இப்­போது ஜி.எஸ்.டி.,தொடங்கி 2 ஆண்­டு­களில், 1.22 கோடி வர்த்­த­கர்­கள் (2020 பிப்­ர­வரி 17 கணக்­குப்­படி) ஜி.எஸ்.டி., பதிவு செய்­துள்­ள­தாக ஒரு புள்­ளி­வி­வ­ரம் சொல்­கிறது. இதன்­மூ­லம், 41.99 கோடி ரிடர்ன்ஸ் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.ஜி.எஸ்.டி.,பதிவு குறித்து சிறு­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு அடிக்­கடி சந்­தே­கங்­கள் எழுந்து வரு­கிறது. இன்­றைய கட்­டு­ரை­யில் ஜி.எஸ்.டி., வரம்பு, கட்­டாய பதிவு பற்றி பார்ப்­போம்.

ஜி.எஸ்.டி., பதிவு ஏன் அவசியம்?ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்­ட­வர்­கள் மட்­டுமே வினி­யோ­கஸ்­தர்­க­ளாக அல்­லது வரி­தா­ரர்­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வார்­கள். பதிவு செய்த வரி­தா­ரர் மட்­டுமே தங்­க­ளது விற்­ப­னைக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ஜி.எஸ்.டி., வசூல் செய்து அர­சி­டம் சமர்ப்­பிக்க முடி­யும். தவிர அந்த நிறு­வ­னம் வாங்­கும் பொரு­ளுக்­கும் உள்­ளீட்டு வரி வரவு எடுக்க முடி­யும்.

பதிவு வரம்பு என்ன?ஜி.எஸ்.டி., பதிவு வரம்பை அறிந்து கொள்­வ­தற்கு, நீங்­கள் செய்­யும் தொழில் ‘விற்­பனை’ என்ற வரம்­பில் வருமா அல்­லது ‘சேவை’ வரம்­பில் வருமா என்­பதை உறுதி செய்ய வேண்­டும்.ஜி.எஸ்.டி.,சட்­டப்­படி, சரக்கு விற்­ப­வ­ராக இருந்­தால், நிறு­வ­னத்­தின், விற்­று­மு­தல் (டர்ன்­ஓ­வர்) ஒரு நிதி­யாண்­டில், ரூபாய் 40 லட்­சத்­திற்­கும் மேல் இருந்­தால் ஜி.எஸ்.டி.,யின் கீழ் அந்­நி­று­வ­னம் கட்­டா­யம் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும். மார்ச் 31, 2019 வரை இந்த வரம்பு ரூபாய் 20 லட்­ச­மாக இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சிறப்பு அந்­தஸ்து வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளுக்கு இந்த வரம்பு 20 லட்­ச­மாக உள்­ளது.சேவை வழங்­கும் தொழில் செய்­ப­வ­ராக இருந்­தால், வரவு ஒரு நிதி­யாண்­டில் ரூ. 20 லட்­சத்­திற்­கும்­மேல் இருந்­தாலோ சிறப்பு அந்­தஸ்து மாநி­லங்­களில் ரூபாய் 10 லட்­சத்­திற்­கும் மேல் இருந்­தாலோ ஜி.எஸ்.டி.,பதிவு அவ­சி­யம். தான் உற்­பத்தி செய்து விளை­வித்த வேளாண் பொருட்­கள் விற்­பனை செய்­யும் ஒரு விவ­சாயி பதிவு செய்ய வேண்­டி­ய­தில்லை. ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் பிரத்­யே­க­மாக செய்­யும் வரி­யில்­லாத அல்­லது மொத்­த­மும் விலக்­க­ளிக்­கப்­பட்ட சரக்கு மற்­றும் / அல்­லது சேவை­களை கொண்­டி­ருப்­ப­வ­ரும் பதிவு செய்ய வேண்­டி­ய­தில்லை.

தொகுப்­பு­மு­றை­யால் என்ன பயன்?
ஆண்­டுக்கு விற்­று­மு­தல் ரூபாய் 1.5 கோடியை விட குறை­வாக இருக்­கும் பட்­சத்­தில், தொகுப்பு முறை (Composition Scheme)யை பயன்­ப­டுத்தி மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை வரி கட்டி, மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை வரி தாக்­கல் செய்­தால் போதும். ஆனால் தொகுப்பு முறையை உப­யோ­கப்­ப­டுத்­து­ப­வர்­கள் உள்­ளீட்டு வரி எடுக்க முடி­யாது. ஜி.எஸ்.டி., வசூல் செய்ய முடி­யாது. விற்­று­மு­தல் முத­லில் ஒரு சத­வீ­தத்தை வரி­யாக செலுத்த வேண்­டும். உண­வ­கங்­க­ளுக்கு இது 5 சத­வீ­தம் ஆகும்.

கட்டாய பதிவு முறைஇந்த வரம்­புக்கு கீழ் உள்­ள­வர்­களும், சட்­டப்­பி­ரிவு 24ன் படி வரம்பு எது­வாக இருந்­தா­லும் சிலர் கட்­டா­ய­மாக பதிவு செய்­ய­வேண்­டும்.* இரு வேறு மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான வினியோ­கம் (Inter-state Supply)* நிரந்­த­ர­மற்ற வர்த்­த­கர்­கள் (Casual Taxpayers)* எதிர்­முறை வரி­வி­திப்பு முறை­யில் வரி செலுத்­தும் நபர்­கள் (Reverse charge Mechanism)* வரிக்­குட்­பட்ட பொருள் மற்­றும் சேவையை இந்­தி­யா­வில் வணி­கம் செய்­யும் நோக்­கில் வரும் தற்­கா­லிக வெளி­நாட்டு வர்த்­த­கர்­கள் பதிவு செய்­வது கட்­டா­யம். இந்­தி­யா­வில் எந்த வணிக இட­மும் இருந்­தி­ருக்க கூடாது.* உள்­ளீட்டு சேவை வினி­யோ­கஸ்­தர்­கள் (சட்­டப்­படி பதிவு செய்­தி­ருந்­தா­லும் அல்­லது செய்­யா­விட்­டா­லும்)* பதிவு செய்த வரி செலுத்­து­ப­வ­ருக்கு பதி­லாக ஒரு ஏஜன்ட் அல்­லது வேறு யாரோ சரக்கு மற்­றும் / அல்­லது வழங்­கல் செய்­தால்* ஒவ்­வொரு மின்­னணு வர்த்­த­கம் இயக்­கு­ப­வர் (ஈ-காமர்ஸ் ஆப­ரேட்­டர்) அமே­சான், பிளிப்­கார்ட், ஸ்நா­ப­டீல் போன்­றவை* வெளி­நாட்­டி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு இணை­ய­தள தக­வல் மற்­றும் தர­வுத்­தள அணு­கல் (Retrieval Services) அல்­லது திரும்­பப் பெறும் சேவை­களை வழங்­கு­வ­தற்­கான ஒவ்­வொரு நப­ரும்.இந்த வரம்­புக்கு உட்­ப­டா­த­வர்­களும் தாமாக முன் வந்து பதிவு செய்­யும் வசதி உள்­ளது.

பதிவு செய்வது எப்படிஜி.எஸ்.டி., வரிப்­ப­திவு, வரு­மான வரி நிரந்­த­ரக்­க­ணக்கு எண்ணை (PAN) அடிப்­ப­டை­யாக கொண்­டது. ஒரு­வர் இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தில் இருந்து வியா­பா­ரம் செய்­தா­லும் அந்த நிரந்­த­ரக் கணக்கு எண் ஒரே வியா­பா­ர­மாக கரு­தப்­படும். அதா­வது ஒரே நிரந்­த­ரக் கணக்­கில் இரண்டு அல்­லது பல்­வேறு பெய­ரில் வியா­பா­ரங்­கள் செய்­தா­லும் அவற்­றின் கூட்டு தொகை கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­படும். ரூ.40 லட்­சம் வரம்பு என்­பது அனைத்து மாநி­லங்­க­ளி­லும் ஒரு நபர் செய்த வரிக்­குட்­பட்ட சரக்கு மற்­றும் சேவை, ஏற்­று­மதி, வரி­வி­லக்கு வினியோ­கம் ஆகி­ய­வற்­றின் கூட்டு தொகை­யா­கும்.

பதிவு செய்ய விரும்­பு­ப­வர் ஜி.எஸ்.டி (https://reg.gst.gov.in/registration/ வலைத்­த­ளத்­தில் ஆன்­லை­னில் மட்­டுமே பதிவு, வரித்­தாக்­கல், ரீபண்ட் என அனைத்­தும் செய்­யப்­பட வேண்­டும். பதிவு செய்ய பெயர், மாநி­லம், நிரந்­த­ரக் கணக்கு எண், இ-–மெயில், மொபைல் எண், ஆகி­ய­வற்றை குறிப்­பிட வேண்­டும். ஜி.எஸ்.டி., வலை­த­ளத்­தில் இணைய குறிப்பு எண் (User ID) மற்­றும் கடவு எண்(OTP) கொடுக்­கப்­படும். பின் REG-01 படி­வத்தை பூர்த்தி செய்து நிரந்­தர கணக்கு எண், தொடர்பு விப­ரங்­கள், இமெ­யில் முக­வரி, தொடர்பு எண், புகைப்­ப­டங்­கள், கூட்டு ஒப்­பந்­தம், பதிவு சான்­றி­தழ் அல்­லது மற்ற நிறு­வன ஆதா­ரங்­கள், வாடகை / குத்­தகை ஒப்­பந்­தம், வங்கி கணக்கு தொடர்­பான ஆதா­ரம் போன்ற ஆவ­ணங்­க­ளு­டன் சமர்ப்­பிக்க வேண்­டும்நிறு­வ­னங்­கள் என்­றால் இதனை டிஜிட்­டல் கையெ­ழுத்து(DSC) மூல­மாக உறுதி செய்ய வேண்­டும். மற்­ற­வர்­கள் மொபைல் மற்­றும் மின்­னஞ்­சல் OTP மூலம் உறுதி செய்ய வேண்­டும். ஏதே­னும் கேள்­வி­கள் இருந்­தால் மூன்று நாட்­க­ளுக்­குள் அதி­கா­ரி­கள் கேட்­பார்­கள் பதிலை ஏழு நாட்­க­ளுக்­குள் சமர்ப்­பிக்க வேண்­டும். பொது­வாக பதிவு 3 முதல் 7 நாட்­க­ளுக்­குள் செய்­யப்­படும்.

அடையாள எண் எப்படி இருக்கும்?15 இலக்­கங்­களை கொண்­டது ஜி.எஸ்.டி., வரி அடை­யாள எண். முதல் 2 இலக்­கம், மாநி­லத்தை குறிக்­கும், அடுத்த 10 இலக்­கம், வரு­மான வரி நிரந்­த­ரக் கணக்கு (PAN) எண்ணை குறிப்­பி­டும். அடுத்த 2 இலக்­கம், ஒன்­றுக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு, கடைசி இலக்­கம் சோத­னைக்­காக.ஜி.எஸ்.டி., வரி செலுத்த பதிவு செய்­த­பின், 2 வகை­யான கணக்­குப் பதி­வே­டு­கள் ஜி.எஸ்.டி., வலை­த­ளத்­தில் திறக்­கப்­படும். இணை­ய­த­ளத்­தில் பதிவு செய்து கொண்­டால், மின் கணக்­குப் புத்­த­கம், ரொக்­கம் மற்­றும் உள்­ளீட்டு வரவு மற்­றும் வரிப் பொறுப்பு பதி­வேடு ஆகி­யவை அந்­தப் பக்­கத்­தில் எப்­போ­தும் தெரி­யும்.இது வரு­மான வரித் துறை­யில் உள்ள உங்­க­ளது படி­வம் 26AS போன்­றது.

உங்கள் கேள்வி என் பதில்
நான் ஜி.எஸ்.டி., பதிவு செய்­ய­வில்லை. நான் வாங்­கும் பொருட்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி ஏதும் எடுக்க முடி­யாது என்­கி­றார்­கள் விவ­ரங்­கள் தேவை– கே பாண்­டு­ரங்­கன், கரு­மத்­தம்­பட்டி.
ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்­ட­வர்­கள்­தான் உள்­ளீட்டு வரியை எடுக்க முடி­யும். ஜிஎஸ்டி பதிவு செய்­யா­த­வர்­கள் வரி­யை­யும் வசூல் செய்ய முடி­யாது. நீங்­கள் வாங்­கும் பொருட்­க­ளுக்­கும் உள்­ளீட்டு வரி எடுக்க முடி­யாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)