பதிவு செய்த நாள்
28 பிப்2020
10:46
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி உடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 1100 புள்ளிகளும், நிப்டி 300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின.
கொரானா வைரஸ் பாதிப்பு சீனாவை மட்டுமல்ல, உலகளவில் பங்குச்சந்தைகளிலும் நிலை குலைய வைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்.,28) கடும் சரிவால் ஆட்டம் கண்டன. மேலும் கச்சா எண்ணெய் விலையும் கடும் வீழ்ச்சி கண்டதாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாலும் இன்றைய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்து 38,645.39ஆகவும், நிப்டி 329.50 புள்ளிகள் சரிந்து 11,303.80ஆகவும் சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல்., டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் பெரும்பாலும் சரிவுடனேயே வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் சரிந்து ரூ.71.94ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|