பதிவு செய்த நாள்
10 மார்2020
01:28
திருப்பூர்:‘கொரோனா’ எதிரொலியாக, இந்தியா, உலகளாவியஆடை சந்தையை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது: கம்போடியாவின் ஆடை தயாரிப்புகளுக்கு, ஐரோப்பிய நாடுகள், 11 சதவீத வரி விதித்துள்ளன.
சீனாவில் இருந்து துணியைப் பெற்று ஆடை தயாரிக்க வேண்டியுள்ளதும், கம்போடியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மூலப்பொருள் கிடைக்காமல், உரிய காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியாமல், வியட்நாமும் திணறி வருகிறது.திருப்பூர் உட்பட இந்தியஆடை ஏற்றுமதியாளர்கள், இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது. உலகளாவிய வர்த்தக சந்தையை வசப்படுத்த, இதுவே சரியான தருணம்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகள், அதிகளவில் வரத் துவங்கியுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|