பிணையம் இல்லாமல் சிறுதொழில் கடன் வேண்டுமா?பிணையம் இல்லாமல் சிறுதொழில் கடன் வேண்டுமா? ...  நிறுவனங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை நிறுவனங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை ...
வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம் - வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் - நிர்மலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2020
17:16

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நடப்பு நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதங்களாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. நடப்பு நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில் துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.

2018 - 19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படும்.

மார்ச் 31ல் முடிவடைய இருந்த ஆதார் - பான் கார் இணைப்பிற்கான அவகாசம் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி, சுங்கவரி கணக்கு தாக்கல் செய்ய தொழில் துறையினருக்கு கடுதல் அவகாசம் அளிக்கப்படும். 5 கோடிக்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அவதிப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால், ஜூன் 30 வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். கார்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை கிடையாது. ஜீரோ பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணலாம். அனைத்து வங்கி ஏடிஎம்.,களிலும் சேவைக் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். மக்கள் வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)