அத்தியாவசியமற்ற பொருட்கள் ‘ஆன்லைன்’ விற்பனை நிறுத்தம் அத்தியாவசியமற்ற பொருட்கள் ‘ஆன்லைன்’ விற்பனை நிறுத்தம் ...  அடுத்த நான்கு மாதங்களுக்கு அதிக பாதிப்பு அடுத்த நான்கு மாதங்களுக்கு அதிக பாதிப்பு ...
பங்கு வெளியீட்டில் ஈசாப் ஸ்மால் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2020
03:38

புதுடில்லி : ஈசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிறுவனம், 976 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, கடந்த ஜனவரி மாதத்தில், செபிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதையடுத்து, தற்போது செபி அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 800 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 176.2 கோடி ரூபாய்க்கு நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன், 300 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சி குறித்தும் ஆலோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டவிருக்கும் நிதியின் அளவு குறையும்.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.கேரளாவை அடிப்படையாக கொண்ட இந்த வங்கி, 16 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் செயல்பட்டு வருகிறது. இதற்கு மொத்தம், 403 கிளைகள் உள்ளன; 37.3 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)