பதிவு செய்த நாள்
31 மார்2020
04:42
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கி சேவைகளை, ‘வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக வழங்கும் புதிய சேவையை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளே உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு, சில அடிப்படை சேவைகளை உள்ளடக்கிய, ‘வாட்ஸ் ஆப்’ செயலி வங்கி சேவையை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இதன் வாயிலாக, வங்கி கணக்கு இருப்பு விபரம், கடைசியாக மேற்கொண்ட மூன்று பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு வரம்பு, உடனடி கடன் தொடர்பான விபரம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தடை செய்தல் உட்பட, பல்வேறு சேவைகளை பெற முடியும்.இந்த சேவைகளை பெற வாடிக்கையாளர்கள், 93249 53001 என்ற மொபைல் எண்ணிற்கு, தாங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து, குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|