உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்புஉலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்பு ...  வீட்டிலிருந்தே வரி வசூல் வீட்டிலிருந்தே வரி வசூல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதியாண்டு கணக்கு முடிப்பு தெளிவுபடுத்திய வங்கி அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
04:44

சென்னை; நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி, ஜூன் வரை நீட்டிக்கப்பட உள்ளது என, வெளியான தகவல் தவறானது; இன்றுடன் நிதியாண்டு கணக்கு முடிக்கப்படுகிறது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான ஆண்டு, நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை பின்பற்றுகின்றன. மார்ச் மாதம், 31ம் தேதியுடன், கணக்கை முடித்து, ஏப்., 1ல் புதிய கணக்கை துவங்குவர்.‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிதியாண்டு கணக்கு முடிப்பை, ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்’ என, வங்கிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், ‘நிதியாண்டு கணக்கு முடிப்பு, ஜூன் 30வரை நீட்டிக்கப்படுகிறது’ என, ஆர்.பி.ஐ., அறிவித்ததாக ஒரு தகவலும் பரவியது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டுக்கான கணக்கு முடிப்பு, இன்று முடிகிறது. இதற்காக, வங்கிகள் இன்று வழக்கம் போல், மாலை வரை செயல்படும்.ஜூன், 30 வரை, நிதியாண்டு கணக்கு முடிக்க அவகாசம் வழங்கி, இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதாக வந்த தகவல் தவறானது. எனவே, மார்ச், 31ல், வழக்கம் போல் கணக்கு முடித்து, ஏப்., 1ல் புதிய கணக்கு துவங்கப்படும். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)